/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம் சுட்டெரிக்கும் வெயிலில் பயணியர் அவதி
/
நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம் சுட்டெரிக்கும் வெயிலில் பயணியர் அவதி
நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம் சுட்டெரிக்கும் வெயிலில் பயணியர் அவதி
நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம் சுட்டெரிக்கும் வெயிலில் பயணியர் அவதி
ADDED : ஏப் 24, 2025 02:22 AM

நேமம், :திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில், வெள்ளவேடு அடுத்துள்ளது நேமம் கிராமம். இங்கிருந்து, சென்னை மற்றும் திருவள்ளூருக்கு பணி நிமித்தமாக பகுதிவாசிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ -- மாணவியர் என, தினமும் 500க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாததால், பகுதிவாசிகள் மழையிலும், வெயிலிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தற்போது காலையிலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் பேருந்துக்காக காத்திருக்கும் பகுதிவாசிகள் மற்றும் மாணவ, மாணவியர் சுட்டெரிக்கும் வெயிலில் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நெடுஞ்சாலையோரம் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டுமென நேமம் பகுதிவாசிகள் மற்றும் மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

