/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிராம உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
/
கிராம உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 26, 2025 02:22 AM
திருவள்ளூர்:மாவட்டம் முழுதும் காலியாக உள்ள 151 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், ஆவடி - 4, கும்மிடிப்பூண்டி - 22, பள்ளிப்பட்டு - 4, பொன்னேரி - 30, பூந்தமல்லி - 21, ஆர்.கே.பேட்டை - 10, திருத்தணி - 11, திருவள்ளூர் - 18, ஊத்துக்கோட்டை - 31 என, மொத்தமுள்ள ஒன்பது வட்டங்களில், 151 கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது.
இந்த காலி பணியிடங்கள், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பத்தை, https://tiruvallur.nic.in/ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.