sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கஞ்சா விற்றவர் கைது

/

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது


ADDED : ஜன 04, 2025 09:46 PM

Google News

ADDED : ஜன 04, 2025 09:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பது சகஜமாக நடந்து வருகிறது. போலீசார் தீவிர சோதனை செய்து, அவ்வப்போது கஞ்சா கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகிறது. ஆனாலும், தொடர்ந்து கஞ்சா விற்பது தொடர்கிறது.

இதில் குறிப்பாக, பள்ளி, கல்லுாரி மாணவர்களை குறி வைப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நேற்று முன்தினம், வெள்ளியூர் அரசு பள்ளி அருகே, கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. வெங்கல் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ், 21, என்பது தெரியவந்தது. அவரை சோதனை செய்ததில், 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

அரசு பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய வந்தவரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us