sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

டயர் வெடித்து கவிழ்ந்த கார்: முதிய தம்பதி பலி

/

டயர் வெடித்து கவிழ்ந்த கார்: முதிய தம்பதி பலி

டயர் வெடித்து கவிழ்ந்த கார்: முதிய தம்பதி பலி

டயர் வெடித்து கவிழ்ந்த கார்: முதிய தம்பதி பலி


ADDED : அக் 02, 2025 10:45 PM

Google News

ADDED : அக் 02, 2025 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநீர்மலை, டயர் வெடித்து கார் கவிழ்ந்த விபத்தில், கணவன், மனைவி இருவர் பரிதாபமாக பலியாகினர். ஆறு பேர் காயமடைந்தனர்.

மணலியை சேர்ந்தவர் துரைப்பாண்டி, 49. இவர், நேற்று மதியம் உறவினர்கள் ஏழு பேருடன், துாத்துக்குடியில் நடக்கும் கோவில் திருவிழாவில் பங்கேற்க, மணலியில் இருந்து 'மாருதி ஈகோ' காரில் புறப்பட்டார். காரை துரைப்பாண்டி ஓட்டினார்.

பெருங்களத்துார் - மதுரவாயல் புறவழிச்சாலையில், திருநீர்மலை, அருணா எம் - சாண்ட் பிளான்ட் அருகே வந்தபோது, திடீரென காரின் பின்புற வலது டயர் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், காரில் பயணம் செய்த மணலியைச் சேர்ந்த முனியாண்டி, 79, அவரது மனைவி கணபதி, 69, ஆகியோர், சம்பவ இடத்திலேயே பலியாகினர். துரைப்பாண்டி, பத்மா, 48, இந்திராணி, 45, பூர்ணா, 24, சந்தியா, 22, சேர்மகனி, 72, ஆகிய ஆறு பேர் பலத்த காயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த ஆறு பேரையும் '108' ஆம்புலன்ஸ் மூலம், தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, இறந்தவர்களின் உடல்களை, பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்த விபத்தால், புறவழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us