/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயிலில் அடிபட்டு தச்சர் உயிரிழப்பு
/
ரயிலில் அடிபட்டு தச்சர் உயிரிழப்பு
ADDED : நவ 24, 2024 09:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி:ஆவடி, காமராஜர் நகர், உடையார் தெருவைச் சேர்ந்தவர் ராஜி, 54; தச்சர். இவருக்கு மனைவி, மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.
நேற்று காலை, ஹோட்டலில் சாப்பிட்டு வருவதாக கூறிச் சென்ற ராஜி, ஆவடி - இந்து கல்லுாரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு, தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆவடி ரயில்வே போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.