sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகள் கால்நடைகள் உண்ணும் அவலம்

/

சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகள் கால்நடைகள் உண்ணும் அவலம்

சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகள் கால்நடைகள் உண்ணும் அவலம்

சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகள் கால்நடைகள் உண்ணும் அவலம்


ADDED : ஜூலை 03, 2025 02:48 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 02:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:வீடுகளில் கட்டி வளர்க்காமல் சாலையில் கொட்டப்படும் கழிவுகளை, கால்நடைகள் உண்ணுகின்றன.

ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் ஏராளமான வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் சிலர் மாடுகள் வளர்க்கின்றனர். இவர்கள் மாடுகளை வீடுகளில் வைத்து பராமரிக்காமல் சாலையில் சுற்றித் திரிய விடுகின்றனர்.

இவை, அங்குள்ள காய்கறி, பழம், பூ ஆகிய கடைகளுக்கு செல்கின்றன. அப்போது வியாபாரிகள் அவற்றை துரத்தும்போது தறிகெட்டு ஓடுகின்றன. அப்போது பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மீது மோதி விபத்து ஏற்படுத்துகின்றன.

இப்பகுதியிலும் ஹோட்டல்களின் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்த பிளாஸ்டிக் கழிவுகளை சாலையில் வீசி விடுகின்றனர்.

சாலையில் சுற்றித் திரியும் மாடுகள், இந்த பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணுகின்றன. பேரூராட்சி நிர்வாகம் சார்பில், மாடுகளின் உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கியும், எவ்வித பலனும் இல்லை.

எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us