/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் இளைப்பாறும் கால்நடைகள் வாகன ஓட்டிகள் பகுதிவாசிகள் அவதி
/
சாலையில் இளைப்பாறும் கால்நடைகள் வாகன ஓட்டிகள் பகுதிவாசிகள் அவதி
சாலையில் இளைப்பாறும் கால்நடைகள் வாகன ஓட்டிகள் பகுதிவாசிகள் அவதி
சாலையில் இளைப்பாறும் கால்நடைகள் வாகன ஓட்டிகள் பகுதிவாசிகள் அவதி
ADDED : ஜன 04, 2025 01:28 AM

கடம்பத்துார்:திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்நல்லாத்துார் ஊராட்சி.
இங்குள்ள நெடுஞ்சாலை வழியே அரசு, தனியார், தொழிற்சாலை, பள்ளி, கல்லுாரி பஸ், கனரக வாகனம், இலகு ரக வாகனம், இரு சக்கர வாகனம் என தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் நெடுஞ்சாலையிலேயே உலா வந்து இளைப்பாறுகின்றன.
இதனால் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

