/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளிக்கு 'சிசிடிவி' கேமரா வழங்கல்
/
அரசு பள்ளிக்கு 'சிசிடிவி' கேமரா வழங்கல்
ADDED : ஜூலை 01, 2025 09:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், பள்ளிக்கு 'சிசிடிவி' கேமரா வழங்கினர்.
பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 700க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.
இங்கு படித்த முன்னாள் மாணவர்கள், பள்ளிக்கு 6 'சிசிடிவி' கேமரா வழங்கினர். மேலும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்கள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இதற்கான விழா, நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.