sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

முதல்வரின் முயற்சிக்கு அதிகாரிகள்... முட்டுக்கட்டை!:மரண சாலையாக மாறிய சிப்காட் சாலை

/

முதல்வரின் முயற்சிக்கு அதிகாரிகள்... முட்டுக்கட்டை!:மரண சாலையாக மாறிய சிப்காட் சாலை

முதல்வரின் முயற்சிக்கு அதிகாரிகள்... முட்டுக்கட்டை!:மரண சாலையாக மாறிய சிப்காட் சாலை

முதல்வரின் முயற்சிக்கு அதிகாரிகள்... முட்டுக்கட்டை!:மரண சாலையாக மாறிய சிப்காட் சாலை


ADDED : அக் 28, 2024 01:26 AM

Google News

ADDED : அக் 28, 2024 01:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:தமிழகத்தை தொழில் வளம் மிகுந்த மாநிலமாக மாற்ற பல்வேறு தொழிற்சாலை அமைக்க முதல்வர் பல்வேறு முயற்சி எடுத்து வருகிறார். அவரது செயல்பாட்டை தடுக்கும் வகையில், அதிகாரிகள் சாலை உள்ளிட்ட நலத்திட்ட பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதால், தொழில் முதலீட்டாளர்கள் கடும் அதிருப்தியடைந்து உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஜனப்பன்சத்திரம் முதல் ஆந்திர மாநிலம் திருப்பதியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில், மஞ்சங்காரணை, கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், தாராட்சி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகள் மற்றும் இணைப்பு சாலை வழியே செல்லும் கிராமங்கள் என, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த வழித்தடத்தில் சூளைமேனியில் இருந்து வலதுபுறம் செல்லும் வழியில் தேர்வாய் சிப்காட் தொழிற்பூங்கா உள்ளது.

தேர்வாய் கண்டிகை சிப்காட் வளாகம், 2010ல் 1,127 ஏக்கர் பரப்பளவில் துவக்கப்பட்டது. தற்போது இங்கு, 46 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தினமும் கண்டெய்னர் லாரிகள், சரக்கு லாரிகள் என, 400க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

ஜனப்பன்சத்திரம் -- திருப்பதி சாலையில், தினமும், 10 ஆயிரத்திற்கும்மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. அதிகளவு வாகனங்கள் சென்று வரும் இச்சாலை போடப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

தற்போது இந்த சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில், மஞ்சங்காரணை, கன்னிகைப்பேர், பெரியபாளையம், ஆத்துப்பாக்கம், தண்டலம், பாலவாக்கம், சூளைமேனி, பாலவாக்கம், பேரண்டூர், ஊத்துக்கோட்டை என பெரும்பாலான இடங்களில் பெரிய பள்ளங்கள் உள்ளன.

கன்னிகைப்பேரில் தனியார் கல்லுாரி எதிரில் பெரியபள்ளத்தில் மழைநீர் தேங்கி குளம்போல் உள்ளது. பள்ளங்களை சீர்படுத்தாமல், ஜல்லிக்கற்களை கொட்டி உள்ளனர்.

இரவு நேரங்களில் டூ- வீலர்களில் செல்பவர்கள் வழுக்கி விழுகின்றனர். ஜனப்பன்சத்திரம் துவங்கி, ஊத்துக்கோட்டை வரை, அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை, மேனிலைப் பள்ளிகள் சாலையை ஒட்டி உள்ளன.

காலை, மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூடும் இடங்களில் சாலை மோசமான நிலையில் உள்ளது.தேசிய நெடுஞ்சாலைத் துறை வசம் உள்ள இச்சாலையை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.

தமிழகத்தை தொழில் துறையில் முன்னேறிய மாநிலமாக மாற்ற, தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று தொழிற்துறையினரை சந்தித்து முதலீடுகளை பெற்று வரும் நிலையில், இங்குள்ள அதிகாரிகள் தொழிற்சாலைகளுக்கு தேவையான சாலை வசதியை செய்து தராமல் இழுத்தபடிப்பதால், தொழில்துறையினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்களை குறிப்பிட்ட நேரத்திற்கு எடுத்து செல்ல முடியாததால், தொழில்கள் முடங்கும் அபாயம் உள்ளது. எனவே, முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஜனப்பன்சத்திரம் -- ஊத்துக்கோட்டை இடையே, 32 கி.மீட்டர் சாலையை சீரமைக்க வேண்டும் என, தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us