sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவம் துவக்கம்

/

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவம் துவக்கம்

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவம் துவக்கம்

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவம் துவக்கம்


ADDED : மே 02, 2025 02:42 AM

Google News

ADDED : மே 02, 2025 02:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மற்றும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து வருகிறது. நேற்று, அதிகாலை, 4:30 மணிக்கு சித்திரை மாத பிரம்மோத்சவம் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.

கொடி கம்பம் எதிரே உற்சவர் முருகபெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு, 7:00 மணிக்கு உற்சவர் கேடய வாகனத்தில் எழுந்தருளி தேர்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை உற்சவர் முருகர் வெள்ளி சூரிய பிரபையிலும், இரவு, 7:00 மணிக்கு பூத வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

தினமும் காலை, இரவு பல்வேறு வாகனங்களில் உற்சவர் முருகர் தேர்வீதியில் உலா வருவார். வரும்,7ம் தேதி இரவு மரத்தேரும், 8ம் தேதி இரவு, 8:00 மணிக்கு தெய்வாணை திருக்கல்யாணம் நடக்கிறது.

தொடர்ந்து 9 ம் தேதி கேடய உலா, சண்முகர் உத்சவம், 10ம் தேதி தீர்த்தவாரியுடன் இரவு கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us