/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புகையில்லா போகி கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்
/
புகையில்லா போகி கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்
ADDED : ஜன 12, 2025 02:29 AM

திருவள்ளூர்,
புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுமாறு திருவள்ளூர் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
அறுவடை திருநாளை, தமிழர்கள் பொங்கல் பண்டிகையாக தொன்றுதொட்டு கொண்டாடி வருகின்றனர். பொங்கலின் முதல் நாள், போகி பண்டிகையாக, 'பழையன கழிதலும், புதியன புகுதலுமாக' கொண்டாடி வருவது வழக்கம்.
இந்நாளில், தமிழர்கள், தை திருமகளை வரவேற்கும் முகமாக தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருட்களை அப்புறப்படுத்தி அவைகளை திருஷ்டிக்காக எரிப்பது வழக்கம்.
போகிப் பண்டிகை காலப்போக்கில் பழைய பொருட்கள் எரிக்கும் பழக்கமாக மாறி வந்துள்ளது. போகியன்று தங்களிடம் உள்ள டயர், பிளாஸ்டிக் மற்றும் பிற தேவையற்ற பொருட்களை எரித்து வருகின்றனர்.
இதனால், கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, கந்தக டைஆக்ஸைடு, டையாக்சின், மற்றும் நச்சுத் துகள்களால் சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது. இதன் வாயிலாக கண், மூக்கு, தொண்டை, தோல், மூச்சுத்திணறல் மற்றும் இதர உடல் நல குறைபாடுகள் ஏற்படுகின்றன.
எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில், நாளை, போகி திருநாளில், பழைய பொருட்களை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.