sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

போதை பொருள் விற்பனையை தடுக்க கலெக்டர் அறிவுறுத்தல்

/

போதை பொருள் விற்பனையை தடுக்க கலெக்டர் அறிவுறுத்தல்

போதை பொருள் விற்பனையை தடுக்க கலெக்டர் அறிவுறுத்தல்

போதை பொருள் விற்பனையை தடுக்க கலெக்டர் அறிவுறுத்தல்


ADDED : ஜூன் 28, 2025 08:10 PM

Google News

ADDED : ஜூன் 28, 2025 08:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:கடைகளில் போதை பொருள் விற்பனையை தடுக்க, அனைத்து துறை கூட்டாய்வு நடத்த வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தினார்.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு தரம் மற்றும் விதிகளை நடைமுறைபடுத்துவதற்கான மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம், நேற்று கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், 'உணவு பொருட்களின் தரங்கள் குறித்து கடைகளில், பிற துறையினருடன் கூட்டாய்வு மேற்கொள்ள வேண்டும். ஆய்வின்போது, ஏதேனும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உடனடியாக கடையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

'தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா மற்றும் நிக்கோடின் கலந்த புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டது.

இதில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us