/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மெய்யூரில் நிலத்தை அளந்து கொடுக்க கலெக்டர் உத்தரவு
/
மெய்யூரில் நிலத்தை அளந்து கொடுக்க கலெக்டர் உத்தரவு
மெய்யூரில் நிலத்தை அளந்து கொடுக்க கலெக்டர் உத்தரவு
மெய்யூரில் நிலத்தை அளந்து கொடுக்க கலெக்டர் உத்தரவு
ADDED : பிப் 16, 2025 09:01 PM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை, மெய்யூர் கிராமத்தில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியினரின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு செல்வது.
கடந்த, 2000ம் ஆண்டு, ஜனவரி மாதம், பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 183 பேருக்கு தலா, மூன்று சென்ட் நிலம் வழங்கப்பட்டது. ஆனால் கால் நுாற்றாண்டு கடந்த நிலையில் இதுவரை நிலம் அளவீடு செய்து கொடுக்கவில்லை.
இதுகுறித்து அப்பகுதியினர் பல்வேறு போராட்டங்கள், மனுக்கள் கொடுத்தும் எவ்வித பலனும் இல்லை.
தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் பிரதாப்பை, மெய்யூர் கிராமத்தினர் நேரில் சந்திந்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் பிரதாப், சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள இடங்களை அளந்து கொடுக்க உத்தரவிட்டார்.