sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆரணி, கொசஸ்தலை ஆற்றில் கரை சீரமைப்பை ஆய்வு செய்ய குழு

/

ஆரணி, கொசஸ்தலை ஆற்றில் கரை சீரமைப்பை ஆய்வு செய்ய குழு

ஆரணி, கொசஸ்தலை ஆற்றில் கரை சீரமைப்பை ஆய்வு செய்ய குழு

ஆரணி, கொசஸ்தலை ஆற்றில் கரை சீரமைப்பை ஆய்வு செய்ய குழு


ADDED : மார் 18, 2025 09:12 PM

Google News

ADDED : மார் 18, 2025 09:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:பொன்னேரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கலெக்டர் பிரதாப் கூறியதாவது:

கொசஸ்தலை ஆற்றில் உள்ள கரைகள், கடத்தாண்டு மழையின்போது சேதமடைந்தன. ஆரணி, கொசஸ்தலை ஆற்றில் மேற்கொள்ளப்பட்ட கரை சீரமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டு உள்ளது.

குழுவின் அறிக்கைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளில் வளர்க்கும் மாடுகள் சாலையில் சுற்றித் திரிகின்றன. போக்குவரத்திற்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலைகளில் சுற்றும் மாடுகளை பிடித்து, பட்டிகளில் அடைக்க நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்முறை பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களிடம் அபராதம் விதித்து, பின் விடுவிக்கப்படும். இரண்டாவது முறை அதே உரிமையாளரின் மாடுகள் பிடிபட்டால், அவை ஏலம்விட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us