UPDATED : ஜூன் 17, 2026 04:26 PM
ADDED : ஜூன் 17, 2026 04:21 PM

அ நிறம் | அளவு
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் பாலத்தை கடந்து, அனந்தேரி கிராமத்திற்கு செல்லும் வழியில், வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு வசதிக்காக, உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது.
அதை பராமரிக்க யாரும் இல்லாததால், இரவு நேரம் மட்டுமின்றி, பகலிலும் ஒளிர்ந்து வருகிறது. இதனால், மின்சாரம் அதிக அளவில் வீணாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, உயர் கோபுர மின் விளக்கை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சேகர், அனந்தேரி.
