UPDATED : ஜூலை 15, 2026 03:44 PM
ADDED : ஜூலை 15, 2026 02:50 PM
அ நிறம் | அளவு
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது குப்பம்கண்டிகை கிராமம். இங்கு, ஒருங்கிணைந்த பள்ளி வளாகத்தில், அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இதில், 1 முதல் 5ம் வகுப்பு வரை, 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.
இதே வளாகத்தில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டடம், பயன்பாடின்றி இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
பள்ளி குழந்தைகள் விளையாடும் போது, கட்டடம் இடிந்து விழுந்தால், பெரும் அசம்பாவிதம் ஏற்படும். எனவே, விபத்து ஏற்படும் முன், சேதமடைந்த கட்டடத்தை இடித்து அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜேஷ், குப்பம்கண்டிகை.
