sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சோழவரத்தில் வரைபட அனுமதிக்கு ச.அடிக்கு ரூ.15 'கட்டிங்' கேட்பதாக புகார்

/

சோழவரத்தில் வரைபட அனுமதிக்கு ச.அடிக்கு ரூ.15 'கட்டிங்' கேட்பதாக புகார்

சோழவரத்தில் வரைபட அனுமதிக்கு ச.அடிக்கு ரூ.15 'கட்டிங்' கேட்பதாக புகார்

சோழவரத்தில் வரைபட அனுமதிக்கு ச.அடிக்கு ரூ.15 'கட்டிங்' கேட்பதாக புகார்


ADDED : அக் 08, 2025 12:28 AM

Google News

ADDED : அக் 08, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:சோழவரம் ஒன்றியத்தில், தனி நபர் ஒருவரிடம், ச.அடிக்கு 15 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான், திட்ட வரைபட அனுமதி வழங்கப்படுவதாக, கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

சோழவரம் ஒன்றிய பொதுமக்கள் சார்பில், கலெக்டரிடம் அளிக்கப்பட்ட புகார் மனு:

சோழவரம் ஒன்றியத்தில் தொழிற்சாலை, குடோன், வணிக வளாகம் மற்றும் வீடுகள் கட்ட வேண்டும் என்றால், சி.எம்.டி.ஓ., அலுவலகத்தில் திட்ட வரைபட அனுமதி பெற வேண்டும்.

அதன்படி கட்டடம் கட்டுவோர், அந்த அலுவலக இணையதளத்தில் விண்ணப்பித்து, அவர்களின் அனுமதிக்கு பின், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள், காலியிடத்தை பார்வையிட்டு, அதற்குரிய கட்டணத்தை பெற்றவுடன், அனுமதி வழங்க வேண்டும்.

ஆனால், சமீப காலமாக, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், திட்ட வரைபடத்திற்கு விண்ணப்பித்தவர்களை, செங்குன்றத்தில் உள்ள தனியார் ஒருவரை அணுகி, அவர் மூலமாக அனுமதி பெற வலியுறுத்துகின்றனர்.

அந்த தனிநபர், ச.அடிக்கு 15 ரூபாய், அலுவலக செலவு 50,000 ரூபாய் என பட்டியலிட்டு, வசூலித்து வருகிறார்.

இதனால், புதிதாக கட்டடம் கட்டுவோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே வரைபட அனுமதி கோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களும் தேங்கி உள்ளது.

எனவே, கட்டட வரைபட அனுமதிக்கு பணம் கேட்கும் தனிநபர் மற்றும் உடந்தையாக உள்ள வட்டார வளர்ச்சி ஊழியர்கள் மீதும் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us