sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாநகராட்சி கவுன்சிலருக்கு இறப்பு சான்று தனியார் டாக்டர் மீது கலெக்டரிடம் புகார்

/

மாநகராட்சி கவுன்சிலருக்கு இறப்பு சான்று தனியார் டாக்டர் மீது கலெக்டரிடம் புகார்

மாநகராட்சி கவுன்சிலருக்கு இறப்பு சான்று தனியார் டாக்டர் மீது கலெக்டரிடம் புகார்

மாநகராட்சி கவுன்சிலருக்கு இறப்பு சான்று தனியார் டாக்டர் மீது கலெக்டரிடம் புகார்


ADDED : நவ 03, 2025 10:28 PM

Google News

ADDED : நவ 03, 2025 10:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: உயிருடன் உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலருக்கு, மருத்துவர் ஒருவர் இறப்பு சான்றிதழ் கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயற்கை மரணமாக இருந்தாலும், விபத்து அல்லது கொலை போன்ற இயற்கைக்கு மாறான மரணமாக இருந்தாலும், மருத்துவரின் நேரடி கள பரிசோதனைக்கு பிறகே, இறப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

சிலர் வயது மூப்பு காரணமாக இறந்து பல நாட்கள் ஆகிவிட்டால், இறப்பு சான்று கோரி விண்ணப்பிக்கும்போது, சுகாதார ஆய்வாளர்கள், விண்ணப்பதாரரின் வீட்டின் அருகே விசாரித்து, இறப்பு சான்றிதழ் வழங்குவது வழக்கம்.

இந்நிலையில், காஞ்சிபுரம் நகரில் உயிருடன் உள்ள, மாநகராட்சியின் 48 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக்கு, மருத்துவர் ஒருவர் இறப்பு சான்றிழ் கொடுத்து உள்ளார்.

இதுகுறித்து, கவுன்சிலர் கார்த்தி கூறியதாவது:

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிப்போரில், பெரும்பாலானோருக்கு ஒரே மருத்துவர் பரிந்துரை செய்வதாக தகவல் வந்தது.

இதையடுத்த, தெரிந்த நபர் வாயிலாக எனக்கு இறப்பு சான்று கோரி, காஞ்சிபுரம் ஜவஹர்லால் தெருவில் உள்ள டாக்டர் வேணுகோபன் என்ற மருத்துவரிடம் விண்ணப்பித்தேன்.

இறந்தது யார், எப்படி இறந்தார் என விசாரிக்காமலும், இறந்த நபரின் உடலை பார்க்காமலும், மருத்துவர் வேணுகோபன், 500 ரூபாய் பெற்றுக்கொண்டு, மாரடைப்பால் நான் இறந்து விட்டதாக, இறப்பு சான்றிதழ் கொடுத்துள்ளார். இதுகுறித்து, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவரின் அடாவடி குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், உரிய ஆவணங்களுடன் கவுன்சிலர் கார்த்தி புகார் அளித்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், இந்த விவகாரத்தில் நேரடி விசாரணை நடத்துவதாக உறுதி அளித்துள்ளார்.

மருத்துவர் வேணுகோபன் இதுவரை அளித்த இறப்பு சான்றிதழ் பற்றி தீவிர விசாரணை நடத்த வேண்டும் என, பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முறைகேடாக இழப்பீடு பெற வாய்ப்பு இறப்பு சான்றிதழ் போலியாக பெறுவது அதிகரித்தால், ஒருவர் இறந்து விட்டார் எனக்கூறி பதிவுத்துறையில், சொத்து பிரச்னை தொடர்பான பத்திரங்கள் பதிவு செய்ய வாய்ப்பு எழும். மேலும், இன்சூரன்ஸ் திட்டங்களில், போலி இறப்பு சான்றிதழ் கொடுத்து, இழப்பீடு தொகை பெற வாய்ப்பு உண்டு.








      Dinamalar
      Follow us