/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதராக காட்சியளிக்கும் விளையாட்டு மைதானத்தில் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகள்
/
புதராக காட்சியளிக்கும் விளையாட்டு மைதானத்தில் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகள்
புதராக காட்சியளிக்கும் விளையாட்டு மைதானத்தில் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகள்
புதராக காட்சியளிக்கும் விளையாட்டு மைதானத்தில் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகள்
ADDED : டிச 08, 2024 02:35 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், பெரிய களக்காட்டூர் ஊராட்சிக்குட்பட்டது சின்னகளக்காட்டூர் கிராமம். இங்கு சிற்றேரி எதிரே விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய விளையாட்டு மைதானம், 10 ஆண்டுகளுக்கு முன், ஒன்றிய நிதி வாயிலாக அமைக்கப்பட்டது.
இந்த விளையாட்டு மைதானத்தை இப்பகுதியைச் சேர்ந்த சிறுவர் -- சிறுமியர் மற்றும் இளைஞர்கள் விளையாட பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், ஓராண்டாக விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்தாத நிலையில் தற்போது துருப்பிடித்தும் மைதானத்தில் செடிகள் முளைத்து புதராக காட்சியளிக்கின்றன.
மேலும், கட்டடக் கழிவுகளும் கொட்டப்பட்டு, மைதானம் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுவர் -- சிறுமியர் விளையாட இடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
எனவே, விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமித்துள்ள செடிகள், கட்டட கழிவுகளை அகற்றி சீரமைக்க, திருவாலங்காடு ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.