sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மதிப்பெண்கள் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியருடன் ஆலோசனை

/

மதிப்பெண்கள் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியருடன் ஆலோசனை

மதிப்பெண்கள் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியருடன் ஆலோசனை

மதிப்பெண்கள் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியருடன் ஆலோசனை


ADDED : நவ 13, 2024 09:01 PM

Google News

ADDED : நவ 13, 2024 09:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, 10 மற்றும் பிளஸ் 2 காலாண்டு தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.

இதில், கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் அனைத்து மாணவர்களும், பள்ளிக்கு தினமும் வருவதை உறுதி செய்ய வேண்டும். தினமும் மாணவர்களுக்கு சிறு தேர்வு மற்றும் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்.

ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது, மாணவர்களுக்கு புரியும் விதமாக நடத்தி, வகுப்பின் இறுதியில் பாடத்தின் சுருக்கத்தை கூற வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் தினமும் வீட்டு தேர்வு அளிக்க வேண்டும்.

'நீட்' நுழைவு தேர்வுக்கு அதிக மாணவருக்கு பயிற்சி அளித்து, தேர்வில் வெற்றி பெற செய்ய வேண்டும். பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மை குழு வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு, முதன்மை கல்வி அலுவலர் நிரப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us