sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணியில் ஒப்பந்த ஊழியர் பலி மின்வாரிய அலுவலகம் முற்றுகை

/

திருத்தணியில் ஒப்பந்த ஊழியர் பலி மின்வாரிய அலுவலகம் முற்றுகை

திருத்தணியில் ஒப்பந்த ஊழியர் பலி மின்வாரிய அலுவலகம் முற்றுகை

திருத்தணியில் ஒப்பந்த ஊழியர் பலி மின்வாரிய அலுவலகம் முற்றுகை


ADDED : ஏப் 20, 2025 01:08 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 01:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி,திருத்தணி ஒன்றியம் எஸ்.அக்ரஹாரம் காலனியைச் சேர்ந்தவர் எல்லப்பன், 38. இவர், கே.ஜி.கண்டிகை துணை மின் நிலையத்தில் இயங்கி வரும் இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் செருக்கனுார் பகுதியில் உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டுள்ளது என, மின்வாரிய அலுவலகத்திற்கு புகார் வந்தது. இதையடுத்து, மின்வாரிய ஊழியர்கள் பச்சையப்பன், சிவானந்தம் ஆகியோருடன் எல்லப்பன் சென்றார்.

பின், மின்மாற்றியில் பழுது நீக்குவதற்காக, எல்லப்பன் மின்கம்பத்தில் ஏறிய போது தவறி விழுந்தார். இதில், பலத்த காயமடைந்தவரை, சக ஊழியர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

இதனால், ஆத்திரமடைந்த எல்லப்பன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை 9:00 மணிக்கு, கே.ஜி.கண்டிகை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். உயிரிழந்த எல்லப்பன் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என, கோஷம் எழுப்பினர்.

மின்வாரிய அதிகாரிகள், 'அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us