/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இடவசதி இல்லாததால் வாடிக்கையாளர் கடும் அவதி
/
இடவசதி இல்லாததால் வாடிக்கையாளர் கடும் அவதி
ADDED : மே 10, 2025 03:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுார், காமராஜர் தெருவில் வாடகை கட்டடத்தில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில், 25,000க்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த வங்கி கிளையில், போதிய இடவசதி இல்லை.
இதனால், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள், படிவங்களை பூர்த்தி செய்யவும், பரிவர்த்தனை செய்யவும், வங்கிக்கு வெளியே காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும், வங்கிக்கு வருவோரின் வாகனங்கள், தெருவை அடைத்துக் கொண்டு நிறுத்தி வைக்கப்படுகின்றன.
எனவே, இந்தியன் வங்கி கிளையை, போதிய இடவசதியுடன் கூடிய கட்டடத்திற்கு இடம் மாற்ற வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

