sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரக்கோணம் நெடுஞ்சாலை சேதம் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்

/

அரக்கோணம் நெடுஞ்சாலை சேதம் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்

அரக்கோணம் நெடுஞ்சாலை சேதம் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்

அரக்கோணம் நெடுஞ்சாலை சேதம் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்

1


ADDED : ஏப் 06, 2025 11:43 PM

Google News

ADDED : ஏப் 06, 2025 11:43 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொண்டஞ்சேரி:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கொண்டஞ்சேரி ஊராட்சி. இப்பகுதியில் உள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில், தினமும் 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்ற. இங்கிருந்து, மப்பேடு வழியாக தண்டலம் செல்லும் நெடுஞ்சாலையில் சிறுபாலம் அருகே சாலை சேதமடைந்தது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையினருக்கு புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதையடுத்து, இப்பகுதிவாசிகள் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் கற்கள் மற்றும் கம்பு நட்டு, அதில் சிகப்பு நிற துணியை கட்டி, வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் வைத்துள்ளனர்.

இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர், எதிர்பாராத விதமாக சில நேரங்களில் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர், தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us