sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கோரமங்கலம் நந்தியாற்றின் உயர்மட்ட பாலத்தில் சேதம்

/

கோரமங்கலம் நந்தியாற்றின் உயர்மட்ட பாலத்தில் சேதம்

கோரமங்கலம் நந்தியாற்றின் உயர்மட்ட பாலத்தில் சேதம்

கோரமங்கலம் நந்தியாற்றின் உயர்மட்ட பாலத்தில் சேதம்


ADDED : டிச 07, 2024 01:45 AM

Google News

ADDED : டிச 07, 2024 01:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, திருத்தணி- - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை கோரமங்கலம் அருகே நந்தியாறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே, கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் திருத்தணி நெடுஞ்சாலை துறை சார்பில் பல கோடி ரூபாயில் உயர்மட்ட பாலம் கட்டி வாகனங்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

இதன் வழியாக, 24 மணி நேரமும் வாகனங்கள் சென்றவாறு இருக்கும். இந்நிலையில் உயர்மட்ட பாலத்தை நெடுஞ்சாலை துறையினர் முறையாக பராமரிக்கவில்லை.

இதனால் பாலத்தின் மீது போட்டப்பட்ட சிமென்ட் மற்றும் தார்ச் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பாலத்தின் மீது, ஏழு இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளம் நாளுக்கு நாள் சேதம் அதிகரித்து வருகிறது.

சில நேரங்களில், பள்ளத்தை கவனிக்காமல் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். சிலர் உயர்மட்ட பாலத்தை கடக்கும் போது அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.

உயர்மட்ட பாலத்தின் மீது சாலை சேதமடைந்து உள்ளது குறித்து வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலை துறையினரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே, கோரமங்கலம் உயர்மட்ட பாலத்தை கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்து சீரமைப்பு பணி செய்வதற்கு உத்தரவிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us