sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பூண்டி நீர்த்தேக்கத்தில் சேதமான கரை சீரமைப்பு பணி துவக்கம்

/

பூண்டி நீர்த்தேக்கத்தில் சேதமான கரை சீரமைப்பு பணி துவக்கம்

பூண்டி நீர்த்தேக்கத்தில் சேதமான கரை சீரமைப்பு பணி துவக்கம்

பூண்டி நீர்த்தேக்கத்தில் சேதமான கரை சீரமைப்பு பணி துவக்கம்


ADDED : அக் 09, 2025 02:58 AM

Google News

ADDED : அக் 09, 2025 02:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்,பூண்டி நீர்த்தேக்க மதகு அருகே, சேதமடைந்த கரையை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது.

சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, பூண்டி கொசஸ்தலை ஆற்றின் அருகே நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, 3.23 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்க முடியும்.

இங்கு, மழைக்காலத்தில் சேகரமாகும் தண்ணீர் மற்றும் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நீர் ஆகியவை சேகரிக்கப்பட்டு, சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, பேபி கால்வாய் மற்றும் பிரதான கால்வாய் மூலம், சோழவரம் மற்றும் புழல் ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது, பூண்டி நீர்த்தேக்கத்தில், 2.18 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது. கடந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின்போது, நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது.

அப்போது, உபரி நீர், மதகு வழியாக வெளியேற்றப்பட்டது.

அதிகளவு தண்ணீர் தேங்கியதால், நீர்த்தேக்கத்தின் உட்பகுதியில் மதகு அருகில் கட்டப்பட்டிருந்த கான்கிரீட் சேதமடைந்தது.

இதனால், மண் அரிப்பு ஏற்பட்டு, கரை சேதமடையும் அபாயம் ஏற்பட்டது. தற்போது, வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், பொதுப்பணி - நீர்வள ஆதார துறையினர், உபரி நீர் வெளியேறும் பகுதியில், சேதமடைந்த கரையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us