/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சேதமடைந்த நிழற்குடை பஸ் பயணியர் அச்சம்
/
சேதமடைந்த நிழற்குடை பஸ் பயணியர் அச்சம்
ADDED : மே 31, 2025 02:56 AM

பாப்பரம்பாக்கம்,:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது பாப்பரம்பாக்கம் ஊராட்சி. இப்பகுதிவாசிகள் பயன்பாட்டிற்காக ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிழற்குடை போதிய பராமரிப்பில்லாததால், ஆங்காங்கே விரிசல் அடைந்துள்ளது. இதனால், பகுதிவாசிகள் அச்சத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து அதிகமுள்ள பகுதியில் நிழற்குடை இருந்தும், ஊராட்சி நிர்வாகம் சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, பகுதிவாசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்த நிழற்குடையை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.