/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடம்பத்துாரில் சேதமடைந்த தரைப்பாலம் வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் கடும் அவதி
/
கடம்பத்துாரில் சேதமடைந்த தரைப்பாலம் வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் கடும் அவதி
கடம்பத்துாரில் சேதமடைந்த தரைப்பாலம் வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் கடும் அவதி
கடம்பத்துாரில் சேதமடைந்த தரைப்பாலம் வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் கடும் அவதி
ADDED : ஜன 25, 2025 02:21 AM

கடம்பத்துார்,
கடம்பத்துாரிலிருந்து அதிகத்துார் வழியாக மேல்நல்லாத்துார் செல்லும் ஒன்றிய சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி, கடம்பத்துார், வெண்மனம்புதுார், புதுமாவிலங்கை உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பகுதிவாசிகள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மேல்நல்லாத்துார் சென்று அங்கிருந்து திருவள்ளூர், காஞ்சிபுரம் சென்று வருகின்றனர்.
இப்பகுதியில், கடம்பத்துார் ஏரியிலிருந்து வெளியேறும் கலங்கல் நீர் செல்லும் தரைப்பாலம் உள்ளது. சில தினங்களுக்கு முன், இந்த தரைப்பாலம் சேதமடைந்திருந்தது.
இந்நிலையில், தற்போது மிகவும் சேதமடைந்து மெகா பள்ளமாக மாறியுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.