sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சேதமடைந்த அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை

/

சேதமடைந்த அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை

சேதமடைந்த அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை

சேதமடைந்த அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை


ADDED : ஜன 02, 2025 02:10 AM

Google News

ADDED : ஜன 02, 2025 02:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை:சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியே தினமும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலை, ஆறுவழிச் சாலையாக அமைக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான 98 கி.மீ., நீளச் சாலை, 2014-ம் ஆண்டு, ஆறுவழிச் சாலையாக விரிவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்கான, ஒப்பந்தங்கள் விடப்பட்டு, 2018ம் ஆண்டின் இறுதியில் பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகின்றன.

மாநில நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட்ட மதுரவாயல் முதல், ஸ்ரீபெரும்புதுார் வரையிலான 23 கி.மீ., நீள சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் கட்டத்திற்கு வந்து விட்டது.

இதில், திருமழிசை பகுதியிலிருந்து, ஸ்ரீபெரும்புதுார் வரை உள்ள அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை, பல இடங்களில் சேதமடைந்து பல்லாங்குழியாக மாறியுள்ளது.

வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்வதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் ஆய்வு செய்து, சேதமடைந்த பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us