/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொடி மரங்களாக மாறிய மின்கம்பங்களால் ஆபத்து
/
கொடி மரங்களாக மாறிய மின்கம்பங்களால் ஆபத்து
ADDED : அக் 14, 2025 11:51 PM

திருவாலங்காடு:திருவாலங்காடு மின்பகிர்மான அலுவலகத்திற்கு உட்பட்டு, 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, திருவாலங்காடு அடுத்த கணேசபுரத்தில், கால்நடை மருத்துவமனை எதிரே உள்ள மின்கம்பத்தை மறைக்கும் வகையில், சுற்றிலும் கொடிகள் படர்ந்துள்ளன.
இது, மின்வாரியம் பராமரிப்பில் காட்டும் மெத்தனத்தை பறைசாற்றுவதாக உள்ளது. தற்போது பெய்த மழையால், கொடிகள் செழித்து வளர்ந்து மின்கம்பங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்த கொடிகள், மின்கம்பம் முழுக்க ஆக்கிரமிக்க பல மாதங்கள் எடுத்துக் கொண்டிருக்கும். அதுவரை மின்கம்பங்கள் பராமரிக்கப்படவில்லை. ஒவ்வொரு மாதமும் மின் வழித்தடத்தில் பராமரிப்பு எனக்கூறி, பகல் முழுதும் மின்தடை செய்யப் படுகிறது .
இவ்வாறு படர்ந்துள்ள கொடிகள் மூலம் மின்சாரம் பாய்ந்து, மக்கள் மற்றும் கால்நடைகள் மின் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, கம்பங்களை பராமரிப்பதில் மின்வாரியம் அக்கறை காட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.