/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்
/
சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்
ADDED : ஏப் 23, 2025 02:14 AM

திருமழிசை, நெடுஞ்சாலையில் சரக்கு வாகனங்களில் பயணம் செய்வது தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக, வேலைக்கு செல்லும் உள்ளூர், வெளியூர் தொழிலாளர்கள் மற்றும் திருமணம் போன்ற நிகழ்ச்சிக்கு செல்வோர் என, அனவரும் சரக்கு வாகனங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.
சில இடங்களில் சரக்கு வாகனத்தில் ஏற்றப்படும் பொருட்களின் மேல் ஆபத்தான வகையில் அமர்ந்து பயணம் செய்து வருகின்றனர்.
மேலும், கதவு அமைக்கப்பட்ட சரக்கு வாகனங்களில், கதவை திறந்து வைத்து பயணம் மேற்கொள்ளும்போது, இருசக்கர வாகனத்தில் செல்வோர், திறந்த நிலையில் உள்ள கதவால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆங்காங்கே, வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாரும், இவர்களை கண்டு காணாமல் விட்டு விடுகின்றனர்.
எனவே, சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.