/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூவம் ஆற்று தரைப்பாலத்தில் கரணம் தப்பினால் மரணம்
/
கூவம் ஆற்று தரைப்பாலத்தில் கரணம் தப்பினால் மரணம்
ADDED : ஜன 07, 2025 07:39 AM

புதுச்சத்திரம் : திருமழிசை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் வெள்ளவேடு அடுத்துள்ளது புதுச்சத்திரம். இங்கிருந்து, கூவம் ஆற்றைக் கடந்து, திருநின்றவூர் வழியாக, ஆவடி மற்றும் பெரியபாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையை இணக்கும் வகையில், 1950ம் ஆண்டு, தரைப்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
புதுச்சத்திரத்தில் இருந்து, வேப்பம்பட்டு, திருநின்றவூர், செவ்வாப்பேட்டை, தாமரைப்பாக்கம் கூட்டுசாலை, புதுவாயல் கூட்டு சாலை வழியாக கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலைக்கு, தினமும், 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
கடந்த 74 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த தரைப்பாலத்தில் மழைநீர் வழிந்தோடி அடிக்கடிபோக்குவரத்து துண்டிக்கப்படும்.
இந்நிலையில், 2015ம் ஆண்டு, டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இந்த தரைப்பாலம் மிகவும் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, ஒரு மாதத்திற்கு பின், 13 ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு, 90 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
இந்த பாலம் மிகவும் குறுகலாக உள்ளதால் வாகனப் போக்குவரத்தில் 'மாநிலத்தில் அமைதி நிலவவும், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும், அரசால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் காரணமாக, தமிழகத்தில் பெண்கள் அதிகளவில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மொத்த பெண் பணியாளர்களில், 41 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர்' என, கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது. அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதோடு கரணம் தப்பினால் மரணம் என்ற வகையில் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் பெய்த மழையில், தரைப்பாலத்தில் வெள்ளநீர் வழிந்தோடியதால், 10 நாட்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து தற்போது, தரைப்பாலத்தின் பாதுகாப்பிற்காக இருபுறமும் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு வருகிறது.
மேலும், தரைப்பாலத்தின் சேதமடைந்த பகுதிகளையும், நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைத்து வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம், புதுச்சத்திரம் - திருநின்றவூர் இடையே புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையினர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புதிய மேம்பாலம் கட்ட, தற்போது, தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், விரைவில் நில எடுப்பு பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். நில எடுப்பு பணிகள் நிறைவடைந்தவுடன், புதிய மேம்பால பணிகள் துவங்கப்படும்.
மேலும், இப்பகுதியில் 15 மீட்டர் அகலத்திலும், 198 மீட்டர் நீளத்திலும், 45 கோடி ரூபாயில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு திட்டமிட்டு அரசுக்கு அனுப்பி உள்ளோம்.
அரசிடமிருந்து உத்தரவு, நிதி ஒதுக்கீடு வந்தவுடன், டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

