/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தண்ணீர் குடிக்க வந்த மான் நாய்கள் கடித்ததால் பலி
/
தண்ணீர் குடிக்க வந்த மான் நாய்கள் கடித்ததால் பலி
ADDED : ஏப் 24, 2025 02:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் மற்றும் கன்னிகாபுரம் வனப்பகுதியில் அதிகளவில் புள்ளிமான்கள் மற்றும் மயில்கள் உள்ளன. நேற்று அதிகாலை, வனப்பகுதியில் இருந்து, புள்ளிமான் ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக டி.புதுார் கிராம வயல்வெளிக்கு வந்தது.
அப்போது, கிராமத்தில் இருந்த நாய்கள் புள்ளிமானை கடித்து குதறியது. இதில், புள்ளிமான் பலத்த காயங்களுடன் வயல்வெளியிலேயே உயிரிழந்தது. தகவல் அறிந்து வந்த திருத்தணி வனத்துறையினர், உயிரிழந்த புள்ளிமானை மீட்டு, திருத்தணி கால்நடை மருந்தகத்தில் பிரேத பரிசோதனை செய்து, வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.