sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரக்கோணம் ஐ.என்.எஸ்., ராஜாளியில் பாதுகாப்பு செயலர் கலந்துரையாடல்

/

அரக்கோணம் ஐ.என்.எஸ்., ராஜாளியில் பாதுகாப்பு செயலர் கலந்துரையாடல்

அரக்கோணம் ஐ.என்.எஸ்., ராஜாளியில் பாதுகாப்பு செயலர் கலந்துரையாடல்

அரக்கோணம் ஐ.என்.எஸ்., ராஜாளியில் பாதுகாப்பு செயலர் கலந்துரையாடல்


ADDED : ஜன 15, 2025 11:52 PM

Google News

ADDED : ஜன 15, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம், ராணிபேட்டை மாவட்டம், அரக்கோணம் ஐ.என்.எஸ்., ராஜாளி கடற்படை தளத்திற்கு மத்திய பாதுகாப்பு துறை செயலர்ராஜேஷ் குமார் சிங், நேற்று ஆலோசனை செய்தார்.அவரை ஐ.என்.எஸ்., ராஜாளி கடற்படை கமோ டர் கபில் மேத்தா வரவேற் றார்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதில் தயார்நிலை மற்றும் அதன் பங்கு ஆகியவற்றையும் தளத்தில் உள்ள பல்வேறு செயல்பாட்டு வசதிகளையும் பார்வையிட்டார்.

அப்போது, அவருக்கு கமோடர் கபில் மேத்தா, ஐ.என்.எஸ்., ராஜாளி விமான தளத்தின் செயல்பாடுகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்ட விரிவான செயல்பாடுகள், வளர்ந்து வரும் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் குறித்தும் விளக்கினார்.

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு துறை செயலர் ராஜேஷ் குமார் சிங் ஐ.என்.எஸ்., ராஜாளியில் உள்ள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது, தேசிய கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பு குறித்து பாராட்டியும், புவிசார் அரசியல் நிலப்பரப்பின் மாறும் சவால்களை எதிர் கொள்வதற்காக உயர்மட்ட போர் தயார் நிலை மற்றும் செயல்பாட்டு விழிப்புணர்வை பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் வீரர்களுக்கு எடுத்துரைத்தார்.

இதில் ஐ.என்.எஸ்., ராஜாளி கடற்படை தளத்தின் உயரதிகாரிகள் உட்படபலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us