sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கோட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் வழங்க இழுத்தடிப்பு

/

கோட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் வழங்க இழுத்தடிப்பு

கோட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் வழங்க இழுத்தடிப்பு

கோட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் வழங்க இழுத்தடிப்பு


ADDED : நவ 10, 2025 10:55 PM

Google News

ADDED : நவ 10, 2025 10:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு: திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம், திருத்தம், பிறப்பு, இறப்பு, ஆதரவற்ற விதவை உள்ளிட்ட சான்றிதழ்களை வழங்காமல், அதிகாரிகள் இழுத்தடிப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டுக்கின்றனர்.

திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தின் கீழ், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய தாசில்தார் அலுவலகங்கள் உள்ளன.

அதன் கீழ் செயல்படும் ஆர்.ஐ., - வி.ஏ.ஓ.,க்கள் அலுவலகங்களை கண்காணிக்கும் பணியை கோட்டாட்சியர் மேற்கொள்ள வேண்டும்.

உரிய காலத்தில் பிறப்பு, இறப்பு சான்று பெற முடியாதவர்கள், திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து சான்று பெற முயற்சிக்கின்றனர்.

இங்கு, போதிய உதவியாளர்கள் இருந்தும் பிறப்பு, இறப்பு சான்று வழங்க, பல மாதங்கள் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக, மூன்று தாலுகாவிற்குட்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகள், பட்டாவில் உள்ள பெயர்களை மாற்றுதல், வரைபடம் திருத்தம் செய்தல், புதிதாக பட்டா பெறுதல் உட்பட நிலம் சார்ந்த அனைத்து பிரச்னைக்கும் தீர்வு காண, திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப் பிக்கின்றனர்.

பணிகளை முடித்து சான்று வாங்குவதற்குள் மக்கள் வீட்டிற்கும், கோட்டாட்சியர் அலுவலகத்திற்கும் நடையாய் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், பணம் கொடுத்தால் மட்டுமே பணி நடக்கும் என்ற நிலை தொடர்கிறது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மக்கள் கோட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட அலுவலரை கண்டிக்கிறாரே தவிர, பணி முடித்து கொடுத்து விட்டனரா என, ஆய்வு செய்வதில்லை.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள அனைத்து பட்டா பெயர் மாறுதல், திருத்தம், பிறப்பு, இறப்பு சான்று குறித்து ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us