sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆதிதிராவிடர் குடியிருப்பில் ரூ.4 கோடியில் மேம்பாட்டு பணி

/

ஆதிதிராவிடர் குடியிருப்பில் ரூ.4 கோடியில் மேம்பாட்டு பணி

ஆதிதிராவிடர் குடியிருப்பில் ரூ.4 கோடியில் மேம்பாட்டு பணி

ஆதிதிராவிடர் குடியிருப்பில் ரூ.4 கோடியில் மேம்பாட்டு பணி


ADDED : மார் 15, 2024 08:05 PM

Google News

ADDED : மார் 15, 2024 08:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:தமிழகத்தில், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு, அடிப்படை வசதியை ஐந்து ஆண்டுக்குள் செயல்படுத்த, ஆண்டுக்கு 200 கோடி வீதம், 1,000 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில், 2023-24ம் ஆண்டிற்கு, 4.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியில், சிமென்ட் சாலை, தார் சாலை, பேவர் பிளாக் சாலை, குடிநீர் வசதி, சுடுகாடு மற்றும் தேவையான அடிப்படை வசதி ஆகியவை செய்து கொடுக்க, பணி விவரம் தயாரிக்கப்பட்டது. மாவட்ட குழு ஒப்புதலுடன், மாநில குழுவிற்கு பரிந்து செய்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வாயிலாக, பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.

இதன்படி, மீஞ்சூர் ஒன்றியத்தில், 2 கோடியே 87 ஆயிரம், கடம்பத்துார்- 34.50 லட்சம், கும்மிடிப்பூண்டி- 55.91 லட்சம், பூந்தமல்லி-84.07 லட்சம், திருவள்ளூர்-29.70 லட்சம், பூண்டி-9.90 லட்சம் என, மொத்தம், 4 கோடியே 30 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெற்று, நிறைவடையும் தருவாயில் உள்ளது.






      Dinamalar
      Follow us