sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி கோவிலில் அலைமோதிய கூட்டம் கொளுத்தும் வெயிலில் பக்தர்கள் தரிசனம்

/

திருத்தணி கோவிலில் அலைமோதிய கூட்டம் கொளுத்தும் வெயிலில் பக்தர்கள் தரிசனம்

திருத்தணி கோவிலில் அலைமோதிய கூட்டம் கொளுத்தும் வெயிலில் பக்தர்கள் தரிசனம்

திருத்தணி கோவிலில் அலைமோதிய கூட்டம் கொளுத்தும் வெயிலில் பக்தர்கள் தரிசனம்


ADDED : மே 05, 2025 01:44 AM

Google News

ADDED : மே 05, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.

நேற்று வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மற்றும் திருமண முகூர்த்த நாள் என்பதால், வழக்கத்திற்கு மாறாக காலை முதலே பக்தர்கள் அதிகளவில் தேர்வீதியில் குவிந்தனர். கொளுத்தும் வெயிலிலும் பொதுவழியில் இரண்டரை மணி நேரம் காத்திருந்து, மூலவரை தரிசனம் செய்தனர்.

அதேபோல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். வெயில் கொளுத்துவதால், கோவில் நிர்வாகம் பொதுவழி மற்றும் சிறப்பு தரிசன டிக்கெட் வழி ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு குடிநீர் வழங்கியது.

மலைக்கோவில் அம்மா மண்டபத்தில், கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் வெள்ளப்பானகம் வழங்கப்பட்டது. முன்னதாக, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது.

மேலும், மூலவருக்கு தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. மலைக்கோவிலில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக, திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பக்தர்கள் அதிகளவில் மலைக்கோவிலுக்கு சென்றதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களுக்கு மலைப்பாதையில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us