/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
/
முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
ADDED : அக் 06, 2025 02:16 AM

திருத்தணி,:திருத்தணி முருகன் கோவிலில் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில் இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில், மூலவரை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சில பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பொது வழியில் இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். மேலும், 100 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒரு மணி நேரம் காத்திருந்து தரிசித்தனர்.
முன்னதாக, மூலவருக்கு அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.
இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் வீதியுலா வந்தார்.