/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி முருகன் மலைக்கோவிலில் தொடர் விடுமுறையால் குவிந்த பக்தர்கள்
/
திருத்தணி முருகன் மலைக்கோவிலில் தொடர் விடுமுறையால் குவிந்த பக்தர்கள்
திருத்தணி முருகன் மலைக்கோவிலில் தொடர் விடுமுறையால் குவிந்த பக்தர்கள்
திருத்தணி முருகன் மலைக்கோவிலில் தொடர் விடுமுறையால் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜன 13, 2025 01:14 AM

திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று, வார விடுமுறை ஞாயிறு மற்றும் பொங்கல் பண்டிகையொட்டி, ஏழு நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை அளித்துள்ளதால் வழக்கத்திற்கு மாறாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேர்வீதியில் குவிந்தனர். இதில் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லும் பெண் பக்தர்களும் அதிகளவில் இருந்தனர்.
இதனால் பொது தரிசனத்தில் பக்தர்கள் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் நின்று மூலவரை தரிசித்தனர்.
அதே போல, 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.
முன்னதாக, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு தங்கத்தேரில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தேர்வீதியில் ஒருமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், காலை முதல், மதியம் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கோவில் பேருந்து தவிர மீதமுள்ள அனைத்து வாகனங்களுக்கும் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தன.
இதனால் பெரும்பாலான பக்தர்கள் மலைப்பாதையில் நடந்து சென்றும், சில பக்தர்கள் ஆட்டோக்கள் வாயிலாக சென்றனர்.