/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
/
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜூன் 01, 2025 09:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அதிகளவு பக்தர்கள் குடும்பத்துடன் சென்று அம்மனை தரிசனம் செய்வர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலை முதல் பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தது. காலை 10:30 - 12:00 மணிக்கு அபிஷேக நேரம் என்பதால், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.