sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

/

 திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

 திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

 திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்


ADDED : டிச 08, 2025 06:31 AM

Google News

ADDED : டிச 08, 2025 06:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, ஆயிரக் கணக்கான பக்தர்கள் பொது வழியில் இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

திருத்தணி முருகன் கோவிலில் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று விடுமுறை என்பதால், வழக்கத்திற்கு மாறாக காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். மூலவரை தரிசிக்க, பொது வழியில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மேலும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒன்றரை மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.

உற்சவர் முருகர், வள்ளி - தெய்வானையுடன் தங்கத்தேரில் இரவு 7:00 மணிக்கு எழுந்தருளி தேர்வீதியில் ஒருமுறை வலம் வந்து பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.






      Dinamalar
      Follow us