/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்
/
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED : நவ 25, 2024 02:20 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர். நேற்று வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை, 6:00 மணி முதலே, மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
இதனால் பொது வழிதரிசனத்தில், 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். நேற்று வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் தேர்வீதியில் நீண்ட வரிசையில் பக்தர்கள் மூலவரை தரிசிக்க காத்திருந்தனர்.
பெரும்பாலான பக்தர்கள் பேருந்து, கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் மலைப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்றதால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் தங்கத்தேரில் எழுந்தருளி தேர்வீதியில் வலம் வந்து அருள்பாலித்தார்.