sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வேளாண் மையத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை

/

வேளாண் மையத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை

வேளாண் மையத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை

வேளாண் மையத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை


ADDED : அக் 11, 2024 02:11 AM

Google News

ADDED : அக் 11, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில் விவசாயமே பிரதான தொழில். இதில், அதிகளவில் நெல், கரும்பு, வேர்க்கடலை, காய்கறி மற்றும் பயிறு வகை ஆகியவை பயிரிடுகின்றனர்.

வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு நெல், வேர்க்கடலை விதைகள், உரம் மற்றும் இடுபொருட்களை மானிய விலையில் வழங்குகின்றனர்.

இதற்காக, திருத்தணி மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய இரண்டு வேளாண் விரிவாக்க மையம் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை மையங்களில், விவசாயிகள் பணமாக கொண்டு வந்தால் மட்டுமே, விதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், வேளாண் துறையினர் விவசாயிகள் நலன் கருதி, இந்த வேளாண் மையங்களில் டிஜிட்டல் முறை விற்பனையை தற்போது கொண்டு வந்துள்ளது.

இதுகுறித்து திருத்தணி வேளாண் பொறுப்பு உதவி இயக்குனர் பிரேம் கூறியதாவது:

கடந்த வாரம் வரை விவசாயிகள் விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்களை, வேளாண் விற்பனை மையத்தில் பணம் கொடுத்து வாங்கி வந்தனர்.

தற்போது ஏ.டி.எம்., கார்டு, ‛க்யூஆர்' கோர்டு மற்றும் ‛யுபிஐ' ஆகியவற்றின் வாயிலாக பணப் பரிவர்த்தனை செய்யலாம். எனவே, விவசாயிகள், 'டிஜிட்டல்' முறையில் பணம் பரிவர்த்தனை செய்து விதைகள், இடுபொருட்கள் உள்ளிட்டவற்றை பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us