/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழுதடைந்த பள்ளி கட்டடம் இடிந்து விழும் அபாயம்
/
பழுதடைந்த பள்ளி கட்டடம் இடிந்து விழும் அபாயம்
ADDED : மார் 20, 2025 02:18 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சானுார் மல்லாவரம் கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் வடக்கில், சின்ன சானுார் மல்லாவரம் சாலையில், அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 150 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியின் வடக்கு பகுதியில் பழமையான வகுப்பறை கட்டடம் பழுதடைந்துள்ளது. இதனால், பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்டுள்ளது. இந்த வகுப்பறை கட்டடத்தின் ஓடுகள் சரிந்து விழும் நிலையில் உள்ளன. மேலும், கட்டடமும் வலுவிழந்துள்ளது.
இந்நிலையில், அதே வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில், தற்போது மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனாலும் இடித்து அகற்றப்படாத பழைய கட்டடத்தால், மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.'
எனவே, கைவிடப்பட்ட கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் அல்லது அந்த பகுதிக்கு மாணவர்கள் செல்லாதபடி தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.