sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பழுதடைந்த பள்ளி கட்டடம் மாணவர்கள், பெற்றோர் அச்சம்

/

பழுதடைந்த பள்ளி கட்டடம் மாணவர்கள், பெற்றோர் அச்சம்

பழுதடைந்த பள்ளி கட்டடம் மாணவர்கள், பெற்றோர் அச்சம்

பழுதடைந்த பள்ளி கட்டடம் மாணவர்கள், பெற்றோர் அச்சம்


ADDED : அக் 23, 2024 01:54 AM

Google News

ADDED : அக் 23, 2024 01:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:பூண்டி ஒன்றியம், பெரிஞ்சேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 14 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். இங்கு தலைமையாசிரியர் உள்ளிட்ட இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இங்கு மாணவர்கள் கல்வி கற்க கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது.

தற்போது இந்த கட்டடம் சிதிலமடைந்து உள்ளது. கட்டடத்தின் மேல்பகுதி பழுதடைந்து சிமென்ட் காரைகள் பெயர்ந்துள்ளதால், மழைக்காலங்களில் மழைநீர் ஊடுருவி கட்டடத்தின் மேல் பகுதி எப்போது இடிந்து விழுமோ என்ற அபாய நிலையில் உள்ளது. இந்த கட்டடத்தின் எதிரில் மற்றொரு வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு தற்போது மாணவர்கள் அங்கு கல்வி கற்கின்றனர்.

மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில் மழைநீர் தேங்கி பழைய கட்டடம் இடியும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பூண்டி ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை பழைய கட்டடத்தை இடிக்காமல் மெத்தனமாக உள்ளனர்.

பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்த கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மாணவர்கள், பெற்றோர், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us