sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வெளியேறும் செப்டிக் டேங்க் கழிவுநீர் சுகாதார நிலையத்தில் சீர்கேடு

/

வெளியேறும் செப்டிக் டேங்க் கழிவுநீர் சுகாதார நிலையத்தில் சீர்கேடு

வெளியேறும் செப்டிக் டேங்க் கழிவுநீர் சுகாதார நிலையத்தில் சீர்கேடு

வெளியேறும் செப்டிக் டேங்க் கழிவுநீர் சுகாதார நிலையத்தில் சீர்கேடு


ADDED : ஜூன் 14, 2025 01:49 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடில், பழைய பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு, திருவாலங்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கர்ப்பிணியர் உட்பட, தினமும் 300க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

தற்போது, அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கழிப்பறை செப்டிக் டேங்க் நிரம்பியுள்ளது. கழிவுநீர் கசிந்து வெளியேறி ஆங்காங்கே குளம் போல தேங்கி, கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

செப்டிக் டேங்க் கழிவுநீர் வெளியேறும் பக்கத்தில் குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்கும் அறை உள்ளது.

இதனால், அவர்கள் நோய்த் தொற்று பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, செப்டிக் டேங்க் கழிவுநீரை வெளியேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us