/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாவட்ட கேரம் போட்டி கீர்த்தனா அசத்தல்
/
மாவட்ட கேரம் போட்டி கீர்த்தனா அசத்தல்
ADDED : செப் 22, 2025 10:07 PM
சென்னை;மாவட்ட கேரம் போட்டியில், தண்டையார்பேட்டையை சேர்ந்த தேசிய வீராங்கனையான கீர்த்தனா, தனிநபர் உட்பட மூன்று பிரிவுகளில் முதலிடம் பிடித்து அசத்தினார்.
சென்னை மாவட்ட அளவிலான கேரம் போட்டி, அமைந்தகரையில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில், கேடட், சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர், பதக்கம் அல்லாத பிரிவு, இரட்டையர், ஒற்றையர், கலப்பு இரட்டையர் உள்ளிட்ட, 14 வகையான போட்டிகள் நடந்தன.
பதக்கம் அல்லாத பிரிவில், கோமதி கேரம் அகாடமியின் ஜூலியன் முதலிடத்தை பிடித்தார். 'வெட்ரன்' பிரிவு பெண்களில், செரியன் நகர் அகாடமியின் ராவணம்மாள், ஆண்களில் சென்னை கேரம் சென்டரைச் சேர்ந்த பாலகோட்டையா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
இரட்டையர் பிரிவில், பெண்களில் கேரம் கோச்சிங் சென்டரின் கீர்த்தனா - தைலம் வர்ஷினி ஜோடியும், ஆண்களில் எல்.ஐ.சி., வீரர் திலீப் பாபு - ராணுவ வீரர் அசோக் குமார் ஜோடியும் முதலிடத்தை கைப்பற்றினர்.
கலப்பு இரட்டையர் பிரிவில், மிதுன் - கீர்த்தனா ஜோடி முதலிடத்தை வென்றது. தனிநபர் பெண்களில் கீர்த்தனாவும், ஆண்களில் கிராண்ட் ஸ்லாம் வீரர் அருண்கார்த்திக்கும் முதலிடம் பிடித்தனர்.