sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மழைநீரில் மிதக்கும் மாவட்ட பெருந்திட்ட வளாகம்

/

மழைநீரில் மிதக்கும் மாவட்ட பெருந்திட்ட வளாகம்

மழைநீரில் மிதக்கும் மாவட்ட பெருந்திட்ட வளாகம்

மழைநீரில் மிதக்கும் மாவட்ட பெருந்திட்ட வளாகம்


ADDED : டிச 03, 2024 06:38 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மழைநீரில் மிதப்பதால், ஊழியர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், கலெக்டர், எஸ்.பி., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. 'பெஞ்சல்' புயல் காரணமாக, கலெக்டர் அலுவலகத்தைச் சுற்றிலும் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பாக மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது.

கலெக்டர் வீட்டில் இருந்து மாவட்ட வனத்துறை, வேளாண்மை, கூட்டுறவு துறை, ஆயுதப்படை மைதானம் போன்றவற்றுக்கு செல்லும் சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளது.

தற்போது, கூட்டுறவு துறையில் ரேஷன் கடை ஊழியர் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்காக வரும் விண்ணப்பதாரர் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்வோர் முழங்கால் அளவு தண்ணீரில் தத்தளித்தபடி செல்கின்றனர்.

மேலும், கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகம் முன், தண்ணீர் தேங்கி நீச்சல் குளம் போல் காட்சியளிக்கிறது.

இதே போல, எஸ்.பி., அலுவலக சாலை மற்றும் அரசு மருத்துவக்கல்லுாரி, முதன்மை கல்வி அலுவலகத்திற்கு செல்லும் சாலையிலும் தண்ணீர் தேங்கி உள்ளது.

போதுமான மழைநீர் வடிகால்வாய் இல்லாததே தண்ணீர் தேங்கியதற்கு காரணம் என, அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.

எனவே, மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு அலுவலங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us