sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குப்பை போடாதீர்கள் பேனர் வைத்தும் பலனில்லை?

/

குப்பை போடாதீர்கள் பேனர் வைத்தும் பலனில்லை?

குப்பை போடாதீர்கள் பேனர் வைத்தும் பலனில்லை?

குப்பை போடாதீர்கள் பேனர் வைத்தும் பலனில்லை?


ADDED : பிப் 16, 2025 03:31 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகளில் வசிக்கும் மக்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியற்றில் இருந்து தினமும், 3,000 கிலோ குப்பை சேர்கிறது. பேரூராட்சி சார்பில் குப்பையை அள்ள, துாய்மைப் பணியாளர்கள் மற்றும் தனியார் டிரஸ்ட் வாயிலாக, 26 துாய்மைப் பணியாளர்கள் வண்டிகளில் ஒவ்வொரு வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் மட்கும், மட்காத குப்பையை சேகரிக்கின்றனர்.

நகரை துாய்மையாக வைத்துக் கொள்ள, பேரூராட்சி நிர்வாகம் வாயிலாக குப்பையை சாலையில் கொட்ட வேண்டாம், துாய்மைப் பணியாளர்கள் வரும்போது அவர்களிடம் கொடுக்க வேண்டும் என, பலமுறை கூறப்பட்டு உள்ளது. ஆனாலும், பொதுமக்களுக்கு போதுமான அளவு விழிப்புணர்வு இல்லாததால், மீண்டும் சாலையில் கொட்டுகின்றனர்.

சத்தியவேடு சாலையில் பாலத்தின் அருகே, குப்பையை கொட்டக் கூடாது என, எச்சரிக்கை பேனர் வைத்தும் அங்கேயே மக்கள் குப்பையை கொட்டுகின்றனர்.

நகரை துாய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்களும் ஒத்துழைத்தால் மட்டுமே சாத்தியமாகும்.






      Dinamalar
      Follow us