sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 கிருஷ்ணா கால்வாயில் கலக்கும் கழிவுநீரால் மாசடையும் குடிநீர்

/

 கிருஷ்ணா கால்வாயில் கலக்கும் கழிவுநீரால் மாசடையும் குடிநீர்

 கிருஷ்ணா கால்வாயில் கலக்கும் கழிவுநீரால் மாசடையும் குடிநீர்

 கிருஷ்ணா கால்வாயில் கலக்கும் கழிவுநீரால் மாசடையும் குடிநீர்


ADDED : டிச 06, 2025 06:37 AM

Google News

ADDED : டிச 06, 2025 06:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:பூண்டியில் இருந்து புழல் செல்லும், கிருஷ்ணா கால்வாயில், மழைநீருடன் கழிவுநீரும் கலப்பதால், குடிநீர் மாசடைந்து வருகிறது.

சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி நீர்தேக்கம் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நீர், கொசஸ்தலை ஆறு நீர் மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வருகிறது.

இங்கு சேகரமாகும் தண்ணீரை புழல் ஏரிக்கு கால்வாய் வாயிலாக கொண்டு செல்லப்பட்டு, பின் சென்னைக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பூண்டி-புழல் கால்வாய் வழியில் ஈக்காடு கிராமம் அமைந்துள்ளது. கால்வாய் ஓரம் வசித்து வரும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து, சமீபத்தில் பெய்த மழைநீர் மற்றும் கழிவுநீர், அங்குள்ள மேம்பாலத்தின் அருகில் கால்வாயில் கலக்கிறது. இதனால், சென்னை நகர மக்களுக்கு செல்லும் குடிநீர், கழிவு நீர் கலப்பதால் மாசடைந்து வருகிறது.

எனவே, நீர்வள ஆதாரத் துறையினர், ஈக்காடு அருகில் மழைநீருடன் கலக்கும் கழிவுநீரை, தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us