sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மீஞ்சூருக்கு சட்டசபையில் அறிவித்த குடிநீர் திட்டங்கள்...காணல் நீர்!:கோடையில் தட்டுப்பாடை சமாளிக்குமா அரசு நிர்வாகம்

/

மீஞ்சூருக்கு சட்டசபையில் அறிவித்த குடிநீர் திட்டங்கள்...காணல் நீர்!:கோடையில் தட்டுப்பாடை சமாளிக்குமா அரசு நிர்வாகம்

மீஞ்சூருக்கு சட்டசபையில் அறிவித்த குடிநீர் திட்டங்கள்...காணல் நீர்!:கோடையில் தட்டுப்பாடை சமாளிக்குமா அரசு நிர்வாகம்

மீஞ்சூருக்கு சட்டசபையில் அறிவித்த குடிநீர் திட்டங்கள்...காணல் நீர்!:கோடையில் தட்டுப்பாடை சமாளிக்குமா அரசு நிர்வாகம்


ADDED : பிப் 06, 2025 11:08 PM

Google News

ADDED : பிப் 06, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்:மீஞ்சூருக்கு, கடந்த ஆண்டு, சட்டசபையில் அறிவிக்கப்பட்ட குடிநீர் திட்டங்களுக்கான பூர்வாங்க பணிகள், ஓராண்டாகியும் துவங்கப்படாமல் இருப்பதால், கோடையில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், குடியிருப்புவாசிகள் கவலை அடைந்து உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், அனுப்பம்பட்டு, திருவெள்ளவாயல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ளது. மேற்கண்ட கிராமங்களுக்கு சிறுவாக்கம் கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில், 47 ஆழ்துளை கிணறுகள் அமைத்து, கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இதில் அத்திப்பட்டு கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக, 48 கிராமங்கள், அனுப்பம்பட்டு கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக, 55 கிராமங்கள் என, மொத்தம், 103 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது.

மேற்கண்ட, 103 கிராமங்களுக்கு தினமும், 22.50 லட்சம் லிட்டர் வினியோகம் செய்யப்படும் நிலையில், இதுபோதுமானதாக இல்லை. கிராமங்களின் குடிநீர் தேவையில், 50 சதவீதத்திற்கும் குறைவாகவே வினியோகம் உள்ளது.

அதேபோல, மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, சீமாவரம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. மீஞ்சூர் பகுதிக்கு தினமும், 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. அதே சமயம் மக்களின் தேவையோ, 35 லட்சம் லிட்டராக உள்ளது.

மீஞ்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், குடிநீர் தேவை அதிகமாகவும், வினியோகம் குறைவாகவும் உள்ளது. ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறையும் கோடைகாலங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

குடியிருப்புவாசிகள் டிராக்டர்களில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதையும், கேன்களில் அடைத்து விற்கப்படுவதையும் பயன்படுத்தும் கட்டாய நிலை உண்டாகிறது.

மேற்கண்ட பகுதிகளில் உள்ள குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் நடந்த சட்சபை கூட்டத்தொடர் மானிய கோரிக்கையின்போது, 'மீஞ்சூர் பகுதிக்கு காட்டுப்பள்ளியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் இருந்து, தினமும், 40 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், அதேபோன்று தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தில் இருந்தும், புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும்' என அறிவிக்கப்பட்டது.

இதனால், மீஞ்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என, காத்திருந்த மக்களுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

திட்டம் அறிவிக்கப்பட்டு, ஒராண்டு ஆன நிலையில், அதற்கான பூர்வாங்க பணிகள் ஏதும் இதுவரை மேற்கொள்ளப்படாமல் உள்ளது. மீஞ்சூர் பகுதிக்கான குடிநீர் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளதால், கோடையில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை அரசு இயந்திரம் எவ்வாறு சமாளிக்க போகிறது தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

ஆரணி மற்றும் கொசஸ்தலை ஆறுகளின் இடைப்பட்ட பகுதியில் மீஞ்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் உள்ளன. ஆரணி மற்றும் கொசஸ்தலை ஆறுகளில் இருந்து கடலுக்கு சென்று வீணாகும் மழைநீரை தடுத்து சேமித்து வைத்தாலே, மீஞ்சூர் மக்களின் குடிநீர் தேவையை எளிதாக பூர்த்தி செய்யலாம். இதற்காக கிராமங்களில் உள்ள பெரிய ஏரிகளை சிறு சிறு நீர்தேக்கங்களாக உருவாக்கலாம்.

இயற்கையாக கிடைக்கும் தண்ணீரை சேமித்து வைப்பதற்கான எதிர்கால திட்டங்கள் எதுவும் அரசிடம் இல்லை. அதிகாரிகளும் அதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதில்லை.

புழல் மற்றும் சோழவரம் நீர்த்தேக்கங்களில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்கான வழிவகைகள் உள்ளன. அதற்கு திட்டமிடலாம். 35 கி.மீ., தொலைவில் உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்த, தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தில் இருந்து குடிநீர் கொண்டு சாத்தியமா எனவும் தெரியவில்லை

கண்துடைப்பிற்காக திட்டங்களை அறிவித்துவிட்டு, அதற்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளாமல் இருப்பது வேதனைக்குறியதாகும்.

இனியும் காலம் தாழ்த்தாமல், கோடையில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடை சமாளிக்கும் வகையில், சட்டசபையில் அறிவித்த மீஞ்சூர் பகுதிக்கான திட்டங்களை உடனடியாக துவங்கி நிரந்தர தீர்வு காண எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மற்றும் தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கம் ஆகியவற்றின் வாயிலாக மீஞ்சூர் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கான, முன்மொழிவு அறிக்கை தயாரித்து அரசின் கவனத்திற்கு அனுப்பி உள்ளோம். திட்டப் பணிகளுக்கான ஆய்வு பணிகளும் நடைபெறுகிறது. உரிய நிதி ஆதாரம் ஒதுக்கிய பின், புதிய குடிநீர் திட்டத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். கோடையில் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், விரைவில் மீஞ்சூர் பகுதியின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us